முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை, வெள்ளில் மேல் விடு கூறைக்கொடி விளைந்த கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும் உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே.
| [ 1]
|
ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான், ஓடு அலால் கலன் இல்லான்-உறை பதியாக் காடு அலால் கருதாத கள்ளில் மேயான்; பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே.
| [ 2]
|
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண் பண் ஆர் நால்மறை பாடும் பரமயோகி, கண் ஆர் நீறு அணி மார்பன்-கள்ளில் மேயான், பெண் ஆண் ஆம் பெருமான், எம் பிஞ்ஞகனே.
| [ 3]
|
பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு ஆலும் நறை பெற்ற விரிகொன்றைத்தார் நயந்த கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான், நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே.
| [ 4]
|
விரையாலும் மலராலும் விழுமை குன்றா உரையாலும் எதிர் கொள்ள, ஊரார், அம் மாக் கரை ஆர் பொன் புனல் வேலிக் கள்ளில் மேயான் அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே.
| [ 5]
|
Go to top |
நலன் ஆய பலி கொள்கை நம்பான், நல்ல வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான், கலன் ஆய தலை ஓட்டான்-கள்ளில் மேயான்; மலன் ஆய தீர்த்து எய்தும், மா தவத்தோர்க்கே.
| [ 6]
|
பொடியார் மெய் பூசினும், புறவின் நறவம் குடியா ஊர் திரியினும், கூப்பிடினும், கடி ஆர் பூம்பொழில்-சோலைக் கள்ளில் மேயான் அடியார் பண்பு இகழ்வார்கள், ஆதர்களே.
| [ 7]
|
திரு நீலமலர் ஒண்கண் தேவி பாகம் புரிநூலும் திரு நீறும் புல்கு மார்பில், கரு நீலமலர் விம்மு கள்ளில், என்றும் பெரு நீலமிடற்று அண்ணல் பேணுவதே.
| [ 8]
|
வரி ஆய மலரானும் வையம் தன்னை உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான், பெரியான் என்று, அறிவார்கள் பேசுவாரே.
| [ 9]
|
ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர் பேச்சு இவை நெறி அல்ல; பேணுமின்கள், மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில் தீச் செய்த சடை அண்ணல் திருந்து அடியே!
| [ 10]
|
Go to top |
திகை நான்கும் புகழ் காழிச் செல்வம் மல்கு பகல் போலும் பேர் ஒளியான்-பந்தன்-நல்ல முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த, புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே.
| [ 11]
|