sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   1 th/nd Thirumurai (வியாழக்குறிஞ்சி   Location: திருக்கள்ளில் God: சிவானந்தேசுவரர் Goddess: ஆனந்தவல்லியம்மை) திருக்கள்ளில் ; அருள்தரு ஆனந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு சிவானந்தேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=4AdIJafuRmY  
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை,
வெள்ளில் மேல் விடு கூறைக்கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே.


[ 1]


ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான்,
ஓடு அலால் கலன் இல்லான்-உறை பதியாக்
காடு அலால் கருதாத கள்ளில் மேயான்;
பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே.


[ 2]


எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்
பண் ஆர் நால்மறை பாடும் பரமயோகி,
கண் ஆர் நீறு அணி மார்பன்-கள்ளில் மேயான்,
பெண் ஆண் ஆம் பெருமான், எம் பிஞ்ஞகனே.


[ 3]


பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு ஆலும்
நறை பெற்ற விரிகொன்றைத்தார் நயந்த
கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான்,
நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே.


[ 4]


விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர் கொள்ள, ஊரார், அம் மாக்
கரை ஆர் பொன் புனல் வேலிக் கள்ளில் மேயான்
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே.


[ 5]


Go to top
நலன் ஆய பலி கொள்கை நம்பான், நல்ல
வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான்,
கலன் ஆய தலை ஓட்டான்-கள்ளில் மேயான்;
மலன் ஆய தீர்த்து எய்தும், மா தவத்தோர்க்கே.


[ 6]


பொடியார் மெய் பூசினும், புறவின் நறவம்
குடியா ஊர் திரியினும், கூப்பிடினும்,
கடி ஆர் பூம்பொழில்-சோலைக் கள்ளில் மேயான்
அடியார் பண்பு இகழ்வார்கள், ஆதர்களே.


[ 7]


திரு நீலமலர் ஒண்கண் தேவி பாகம்
புரிநூலும் திரு நீறும் புல்கு மார்பில்,
கரு நீலமலர் விம்மு கள்ளில், என்றும்
பெரு நீலமிடற்று அண்ணல் பேணுவதே.


[ 8]


வரி ஆய மலரானும் வையம் தன்னை
உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு
அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான்,
பெரியான் என்று, அறிவார்கள் பேசுவாரே.


[ 9]


ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சு இவை நெறி அல்ல; பேணுமின்கள்,
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச் செய்த சடை அண்ணல் திருந்து அடியே!


[ 10]


Go to top
திகை நான்கும் புகழ் காழிச் செல்வம் மல்கு
பகல் போலும் பேர் ஒளியான்-பந்தன்-நல்ல
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த,
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கள்ளில்
1.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முள்ளின் மேல் முது கூகை
Tune - வியாழக்குறிஞ்சி   (திருக்கள்ளில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை)

This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_song.php?lang=tamil&pathigam_no=1.119&thirumurai=1&author=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&paadal_name=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%88&pann=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&thalam=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&iraivan=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D&iravi=%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88;